29.6 C
கோட்டக்குப்பம்
May 13, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் பட்டா மாற்ற சிறப்பு முகாம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. மோகன் அவர்களின் உத்தரவின்படி நிலுவையிலுள்ள உட்பிரிவு பட்டா மாற்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்ற பணி 20/12/2021 முதல் வரும் 05/01/2022 தேதி வரை நடக்கிறது. முகாமிற்கு தலா ஒரு பகுதி நில அளவர் என்ற அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பணியை கண்காணிக்க ஒரு குறுவட்டத்திற்கு ஒரு சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பட்டா மாற்ற கோரிக்கை மனுக்கள் மற்றும் பட்டா மாற்ற நிலுவை மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான சிறப்பு முகாம், கோட்டக்குப்பம் கிராம அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிற்று மற்ற தினங்களில் வரும் ஜனவரி மாதம் 5-ம் தேதி வரை நடக்கிறது.

ஆகவே, இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்:

திரு.காமராஜ்,
கிராம நிர்வாக அலுவலர் – 97515 43030

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

குடிநீர் கேட்டு பர்கத் நகர் மக்கள் பேரூராட்சி மன்றம் முற்றுகை..

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் கிளை தமுமுக சார்பாக 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு மழை நிவாரணம்…

Leave a Comment