30.7 C
கோட்டக்குப்பம்
May 12, 2024
Kottakuppam Times
புதுச்சேரி செய்திகள்

3 கட்டங்களாக வாக்குப்பதிவு – புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உளள்து. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறைவு செய்த மாநில தேர்தல் ஆணையம், 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்று அறிவித்துள்ளார். 

அதன்படி, புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  முதல் கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கும், 3ம் கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், நெடட்டப்பாக்கம், வில்லியனூர் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி 1 மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம். அக்டோபர் 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புதுவையில் தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின கடலூர், விழுப்புரத்துக்கும் விரைவில் பஸ் போக்குவரத்து

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.

டைம்ஸ் குழு

புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம்

டைம்ஸ் குழு

Leave a Comment