நூற்றாண்டில் பயணிக்கும் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 79-வது சுதந்திர தினம் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேராசியர் டாக்டர் சமீரா பேகம் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திரத்தின் மகத்துவத்தை உணர்த்தும் உரையினை நிகழ்த்தினார்.
அஞ்சுமன் நூலகத்தின் செயலாளர் லியாகத் அலி கலீமுல்லாஹ் கூடுதல் சிறப்புரையுடன் விழாவை நிகழ்த்தினார்.
இதில் அஞ்சுமன் நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், மற்றும் மதரசா மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். அனைவரும் ஒன்றிணைந்து தேசிய கீதம் பாடி, சுதந்திர தின விழாவைக் கொண்டாடினர்.











