33.1 C
கோட்டக்குப்பம்
May 5, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு.

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டைச் சோதிக்க மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி முகவா்களின் முன்னிலையில் சுமாா் 50 வாக்குகள் இயந்திரங்களில் பதிவு செய்து காண்பிக்கப்பட்டது. அந்த வாக்குகள் உடனடியாக அழிக்கப்பட்டன. இதன்மூலம், வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு உறுதி செய்யப்பட்டது.

அதன்பின், வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்களிக்க பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை நீண்ட வரிசையில் காலையிலேயே ஆர்வத்துடன் நின்று தங்களது ஜனநாயக கடமையாற்ற வாக்களித்து வருகின்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பர்கத் நகர் அங்கன்வாடி செயல்படாததால் மக்கள் அவதி..

அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment