30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

பெரிய தெரு, காஜியார் தெருக்களில் குடிநீர் இணைப்பு உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி இணைப்பு வழங்கிடவும், 2022 மார்ச் மாதம் வரை கட்டாய குடிநீர் கட்டணம் செலுத்த சொல்லுவதை கைவிடவும், கோட்டக்குப்பம் பேரூராட்சியின் செயல் அலுவலர் அவர்கள் அலுவலகத்தில் இருந்து பணி செய்யாமல் இருப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று(11-10-2021) மாலை காயிதே மில்லத் வளைவு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முகமது அனஸ் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் M K முருகன், வட்ட குழு உறுப்பினர்கள் R. சேகர், A. அன்சாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் திரலானவர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லையேனில், அடுத்தகட்ட போராட்டமாக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு செய்துள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கொரானா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் மிஸ்வாக் 2022 காலண்டர் வெளியீடு.

டைம்ஸ் குழு

பெருநாள் இரவில்(இன்று) ஜாமிஆ மஸ்ஜிதில் சிறப்பு அமல்கள்..

Leave a Comment