28.7 C
கோட்டக்குப்பம்
April 28, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 18-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக காவல் ஆய்வாளர் அவர்களிடம் கவுன்சிலர் மனு.

கோட்டக்குப்பம் நகராட்சி 18 -வது வார்டுக்கு உட்பட்ட ஷாதி மஹால் தெரு, பெரிய தெரு மற்றும் கடற்கரை தெருவில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக, புதியதாக கோட்டக்குப்பம் ஆய்வாளராக பொறுப்பேற்று இருக்கும் திரு.சக்தி அவர்களுக்கு நகரமன்ற உறுப்பினர் பர்கத் சுல்தானா நேற்று(21/02/2024) மனு அளித்துள்ளார் .

அந்த மனுவில், “கோட்டக்குப்பம் நகராட்சி 18 -வது வார்டுக்கு உட்பட்ட ஷாதி மஹால் தெருவில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயிலும் இரண்டு அங்கன்வாடி மையங்கள் இருக்கின்றன. இங்கு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கிறார்கள். இந்த தெருவில் இரவு நேரங்களில் பள்ளிக்கூட கட்டிடங்கள் மேல் சிலர் மது அருந்திவிட்டு அங்கேயே மது பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு பயலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பெரிய தெரு, கடற்கரை தெருவில் சிலர் தினமும் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணம் கற்கள் கம்பிகள் வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். ஆகவே இரவு நேர காவல் ரோந்துப்பணி அமைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி: கோட்டக்குப்பதில் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச காய்கறிகள் வினியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பள்ளிவாசல்களின் தொழுகை சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment