கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர தலைவர் M. அப்தல ரஹீம் தலைமையில் இன்று(22/02/2024) காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
இதில், தமுமுக மாநிலச் செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சி அருகில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.
தமுமுக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி அவர்களும், இ.சி.ஆர். சாலையில் MTS ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நகர தலைவர் அப்துல் ரஹீம், பரகத் நகர் M.G.ரோடு சந்திப்பில் அமைப்பு குழு உறுப்பினர் A.K.பஷீர் அகமது ஆகியோர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, கோட்டக்குப்பம் அயூப் கர்டனில் அமைந்துள்ள அன்பு இல்லம் ஊனமுற்ற பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், MTS மாவட்ட துனை செயலாளர் முகமது அலி, கோட்டக்குப்பம் நகர நிர்வாகிகள் நூருல் அமீன், முஹம்மது யூசுப், அபுல் ஹசன், ஆஸ் (எ) ஆபிதீன், அஸ்லம் பாஷா SMI மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.