கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் நவீன தானியங்கி தெரு விளக்குகள் அமைக்கப்படுகிறது. மின்சார ஏற்ற இறக்கங்களை தானாகவே சரி செய்துகொள்ளும் வசதியும், விளக்குகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பொறியாளருக்கு தானாக எச்சரிக்கை அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மூலம் விளக்குகளை ஆன், ஆஃப் செய்யும் வேலைகள் இனிமேல் இருக்காது. குறிப்பாக, இந்த தெருவிளக்கு நேரக் கட்டுப்பாடுகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு எரியத் தொடங்கும் இந்த விளக்குகள், காலை 6 மணிக்கு தானாகவே ஆஃப் ஆகிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நவீன தானியங்கி தெரு விளக்குகள் முதல் கட்டமாக கோட்டக்குப்பம் எம். ஜி ரோடு, இந்தியன் பேங்க் எதிரில் அமைந்துள்ள மின்கம்பத்தில் இன்று பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இத்திட்டம், விரைவில் எம். ஜி ரோடு பகுதி முழுவதும் அமைக்கப்படவுள்ளது.