28.7 C
கோட்டக்குப்பம்
April 28, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மெர்குரி நண்பர்கள் சங்கம் சார்பில் 20-வது வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க கோரிக்கை: உடனடி நடவடிக்கை எடுத்த ஆணையர்.

கோட்டக்குப்பம் மெர்குரி நண்பர்கள் சங்கம் சார்பில் பெருகி வரும் கொசுக்களை கட்டுப்படுத்த 20-வது வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க ஆணையரிடம் இன்று(21/02/2024) மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், “கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட அணைக்குடியர் தெரு, ஹாஜி ஹுசைன் தெரு, ரஹ்மத் நகர் பள்ளிவாசல் தெரு, சிராஜ் மில்லத் வீதி – 1, 2, 3 ஆகிய பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், இதனால் பல விதமான காய்ச்சலுக்கு குழந்தைகள் பெரியோர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், எனவே 20-வது வார்டு முழுதும் கொசு மருந்து அடிக்க வேண்டுமாய் கோரப்பட்டது.

இதையடுத்து, கோட்டக்குப்பம் ஆணையர் அடுத்த சில மணி நேரங்களில் துரிதமாய் செயல்பட்டு நவீன ராட்சத கருவி மூலமாக அந்த பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மனு அளித்த சில மணி நேரங்களில் துரிதமாக செயல்பட்ட ஆணையருக்கு மெர்குரி சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார்.

போதை பொருள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா & 30-வது பட்டமளிப்பு விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment