கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று(18/03/2023) மாலை ஜமியத் நகர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுமார் 50 மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது. பிறகு மாணவிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள், ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.