கோட்டக்குப்பம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு கடற்கரை சாலை சின்ன கோட்டக்குப்பம் சந்திப்பு முதல் கோட்டக்குப்பம் 555 வரையிலான சாலை நடுவில் நிறுவப்பட்டுள்ள மின் விளக்குகள் சரி வர எரிவதில்லை என்ற கோரிக்கையினை ஏற்று,
நகராட்சி சார்பில் ₹.17.30 லட்சம் செலவில் தரை வழி மின் கேபிள் மற்றும் விளக்குகள் அமைக்கப்பட்டு,
அதன் துவக்க விழா இன்று கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு மின் விளக்கினை இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணை தலைவர் ஜீனத் பீ முபாரக், நகராட்சி ஆணையர் திரு.மங்கையர்கரசன், நகர் மன்ற உறுப்பினர்கள் , நகராட்சி மேலாளர் ( பொ ) அண்ணாமலை, நகராட்சி பொறியாளர்கள், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.