June 27, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்

குஜராத்‌ பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில்‌ 11 போ்‌ விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, இந்திய யூனியன்‌ மூஸ்லிம்‌ லீக்‌ மகளிர்‌ அணி சார்பில் நேற்று மாலை 5 மணி அளவில் கோட்டக்குப்பம் காயிதேமில்லத் ஆட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ மகளிர்‌ அணி பிரிவு மாநில பொதுச்‌செயலாளர்‌ ஆயிஷா தலைமை தூங்கினார்‌. இந்த ஆர்ப்பாட்டத்தில்‌ அகில இந்திய தலைவி பாத்திமா மூஸப்பர்‌ கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்‌ 11 பேர்‌ விடுதலையை மத்திய-மாநில அரசுகள்‌ திரும்ப பெற வேண்டும்‌. கொலை மற்றும்‌ கூட்டு பலாத்காரத்தில்‌ ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்‌. நாட்டில்‌ பெண்கள்‌ மற்றும்‌ பெண்‌ குழந்தைகளின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்திட பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள்‌ எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்‌ மாநில, மாவட்ட கோட்டக்குப்பம்‌ நகர இந்திய யூனியன்‌ முஸ்லிம்‌ லீக்‌ நிர்வாகிகள், கோட்டக்குப்பம் நகர்மன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்‌.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது: கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லைகள் அடைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் ஈத்கா மைதானம் & பெருநாள் பஜார் நடைபெறும் தைக்கால் திடல் சுத்தம் செய்யப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முப்பெரும் விழா நிகழ்வுகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் காணலாம்

Leave a Comment