புதுச்சேரி முத்தியால்பேட்டை மற்றும் கோட்டக்குப்பத்தில் இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
18.5.2020.,புதுச்சேரி காந்தி வீதி, E.V.K சித்த மருத்துவமனை மற்றும் கிவ்ஸ் ஆம்புலன்ஸ் சங்கம் இணைந்து கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வீர பாலகிருஷ்னன் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். சித்த மருத்துவர் திருமதி. கார்திகா மற்றும் எழில் கபசுர குடிநீர் பயன்களை பற்றிய விளக்கம் வழங்கினார்கள். கிவ்ஸ் ஆம்புலன்ஸ் சங்க உறுப்பினர்கள் முத்தியால்பேட்டை மற்றும் கோட்டக்குப்பத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் வினியோகம் செய்தனர்.