20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

பெரிய தெரு, காஜியார் தெருக்களில் குடிநீர் இணைப்பு உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி இணைப்பு வழங்கிடவும், 2022 மார்ச் மாதம் வரை கட்டாய குடிநீர் கட்டணம் செலுத்த சொல்லுவதை கைவிடவும், கோட்டக்குப்பம் பேரூராட்சியின் செயல் அலுவலர் அவர்கள் அலுவலகத்தில் இருந்து பணி செய்யாமல் இருப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று(11-10-2021) மாலை காயிதே மில்லத் வளைவு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முகமது அனஸ் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் M K முருகன், வட்ட குழு உறுப்பினர்கள் R. சேகர், A. அன்சாரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் திரலானவர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தவில்லையேனில், அடுத்தகட்ட போராட்டமாக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு செய்துள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

உயிர் பலி வாங்க காத்திருக்கும் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால்?

கோட்டக்குப்பதில் பாரத் பந்த் நடத்திட அனைத்து கட்சி சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது…

கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் SS ஜெயமூர்த்தி. துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக் தேர்வு.

டைம்ஸ் குழு

Leave a Comment