[youtube youtubeurl=”_PhRZXsEwOQ” ][/youtube]
மக்களின் பெரும் ஆதரவு பெற்ற கண்காட்சிக்கு பின்னால்…
ஜாமிஆ மஸ்ஜித் 150ம் ஆண்டு பாரம்பரிய விழாவில் பாரம்பரியத்தை போற்றும் வண்ணம் பாரம்பரிய கண்காட்சி நடத்தும் பணியை நிர்வாகம் எங்கள் குழுவினரிடம் ஒப்படைத்தார்கள்.
மேற்படி பணியை ச.பிலால் முஹம்மது, அ.அமீர்பாஷா, மு.முஹம்மது ரபிக், அ.முஹம்மது அலி, முஹம்மது ஹுசைன், ஆகியோர் மிகவும் சிரத்தையுடன் இந்த பணியை மேற்கொண்டனர். பாரம்பரியத்தை போற்றும் புகைப்படங்களை தேடி ஊரில் உள்ள அனைத்து பெரியோர் களையும் அணுகி தகவல்களை திரட்ட கடந்த 35 நாட்களாக அலைந்து திரிந்தோம். ஒரு புகைப்படத்திற்கு பலமுறை முயற்சி செய்தோம். அப்படி திரட்டப்பட்டு தான் அனைத்து புகைப்படங்களும். வெளிநாட்டில் வசிக்கும் நமதூர் நண்பர்களை தொடர்பு கொண்டு அவர்கள் முகமாகவும் பல புகைப்படங்கள் திரட்டப்பட்டது. இவ்வாறாக ஒவ்வொரு புகைப்படங்களையும் சேகரிக்க மிகவும் சிரத்தை எடுத்துக்கொண்டனர்.
சேகரித்த புகைப்படங்களை இரவு பகல் பாராமல் கடும் சிரமத்திற்கு இடையே தொகுக்கப்பட்டு உங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்காட்சியை காண வாய்ப்பிள்ளாதவர்களுக்காக இந்த வீடியோ தொகுப்பு வெளியிடப்படுகிறது.
கண்காட்சி தொகுப்பாளர்கள்:
ச.பிலால் முஹம்மது,
அ.அமீர்பாஷா,
மு.முஹம்மது ரபிக்,
அ.முஹம்மது அலி,
மு.முஹம்மது காலித்
மு. முஹம்மது பைசல்
வீடியோ தொகுப்பு:
KottakuppamTimes.com