June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டி கவுன்சிலர் மனு

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் நெடுங்காலமாக இருந்து வரும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டி 17-வது வார்டு முஸ்லிம் லீக் நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இன்று நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தார்கள்.

வேங்கை தெரு, மாமுலப்பை தெரு, பஜார் தெரு, மற்றும் ரஹ்மான் நகரில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அப்பகுதியிலேயே சம்பு அமைத்து, அதன் மூலம் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று தீர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த பரிந்துரையை நகராட்சி ஆணையர் அவர்களும் நகரமன்ற தலைவர் அவர்களும் பரிசீலிப்பதாக உறுதி அளித்து உள்ளார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது: கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லைகள் அடைப்பு.

டைம்ஸ் குழு

அனைவருக்கும் எங்களின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா குடியரசு தின விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment