June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்: ஒற்றுமை முழக்கமிட்ட பல்லாயிரக்கணக்கானோர்!

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் இன்று(07/06/2024) காலை 6:15 மணி அளவில் தியாகத்திருநாள் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஜமாத்தார்கள் தக்பீர் முழக்கத்தோடு ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர்.

அதன்பின் ஈத்காகாவில், தியாகத் திருநாள் சிறப்பு பற்றியும், சிறார்கள், இளைஞர்கள் பற்றியும் மௌலவி பஜுலுதீன் அவர்கள் சிறப்பு பயான் செய்தார். பிறகு, ஹஜ் பெருநாள் தொழுகை காலை சரியாக 7:00 மணி அளவில் நடைபெற்றது.

தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும், நலனுக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது.

பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நாளை ஜாமிஆ மஸ்ஜித் மதரஸாவில் நடைபெறுகிறது!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ மருந்து வீடு வீடாக வழக்கப்பட்டுவருகிறது.

வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள்.

டைம்ஸ் குழு

Leave a Comment