26.4 C
கோட்டக்குப்பம்
April 28, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய பா.ஜ.க அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோட்டக்குப்பத்தில் இன்று(15/03/2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்வு. அனைத்துக் கட்சியினர் வரவேற்று கொண்டாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் சேகரித்த குப்பைகளை அந்தப் பகுதியிலேயே கொளுத்தி விட்டு செல்லும் அவலம். நகராட்சி ஊழியர்களை கண்டிப்பாரா ஆணையர்?

டைம்ஸ் குழு

Leave a Comment