குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய பா.ஜ.க அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோட்டக்குப்பத்தில் இன்று(15/03/2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.