31.6 C
கோட்டக்குப்பம்
May 18, 2024
Kottakuppam Times
Uncategorized கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் நடந்தது,.

நகராட்சி மேலாளர் அண்ணாமலை வரவேற்றார், நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கி துப்புரவு பணியாளர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

நகராட்சி ஆணையர் மங்கையர்க்கரசன் சிறப்புரையாற்றினார், தொடர்ந்து பெண்களுக்கான விளையாட்டு, பேச்சு போட்டி, ஓவியப்போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டி நடந்தது,
இதன் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது, நகர நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

மேலும் 50 கிலோ எடையுள்ள கேக் வெட்டி கொண்டாடினர், நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் ஜீனத் பிவீ முபாரக், நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஊழியர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கிவ்ஸ் சார்பில் ரமலான் நோன்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

ஜாமிஆ மஸ்ஜித் லைலத்துல் கதர் நிகழ்ச்சி நிரல்..

கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்!

டைம்ஸ் குழு

Leave a Comment