29.8 C
கோட்டக்குப்பம்
May 15, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு.

கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 80 மாணவ மாணவியர்களுக்கு இன்று மாலை 4:00 மணி அளவில் கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு நடைபெற்றது.

இதில், மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆனந்த் மற்றும் சாரணர் இயக்க அலுவலர் திரு. சாரதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற (police boys club காவல் சிறுவர் சிறுமியர்கள்) திறன் தேர்வு பயிற்சி வகுப்பில் 80 சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு மாணவர் திறன் தேர்வு பயிற்சி வகுப்புகளில் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் திரு ராபின்சன் அவர்கள் முன்னிலையில் பொது அறிவு சம்பந்தமாக, சாலை பாதுகாப்பு, போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது தொடர்பாக மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில் சிறப்பாக பதில் அளித்த சிறுவர் சிறுமிகளுக்கு பாராட்டு சான்றிதழ் அளித்து பரிசு வழங்கி கௌரவித்தார்கள். இதில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் சுதந்திர தின விழா மற்றும் கண்காணிப்பு கேமரா திறப்பு நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டகுப்பதில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் (படங்கள்)

அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரி மற்றும் பெண்கள் அரபிக் கல்லூரி நிதியுதவி வேண்டுகோள்

Leave a Comment