33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நினைவு வளைவு அருகில் தமுமுகவினர் இன்று மாலை 4:30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் A. அஷ்ரப் அலி மற்றும் A. ஜாமியலாம் ராவுத்தர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில கழக பேச்சாளர் A. பிஸ்மில்லாகான் கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள், ஆண்கள், சமூக ஆர்வலர்கள், கோட்டக்குப்பம் நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டு தங்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா..

பரக்கத் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தினம்.

சுட்டெரிக்கும் கோடை வெயில்: ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு நீர் மோர் கொடுத்து அசத்தும் கவுன்சிலர்.

டைம்ஸ் குழு

Leave a Comment