June 27, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

நடுக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் சாலை மறியல்.

கோட்டக்குப்பத்தை அடுத்துள்ள நடுக்குப்பத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினா் வசிக்கின்றனா். கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு காரணமாக அங்குள்ள வீடுகள் இடிந்தன. அதோடு படகு நிறுத்த இடம் இல்லை என அந்த பகுதி மீனவர்கள் ஆதங்கப்பட்டனர். எனவே இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்ககோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் மறியல் செய்தனர். இந்த வழியாகத்தான் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கின்றன.

பிரதான சாலை என்பதால் இந்த இடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். மறியல் செய்த மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது மீனவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்காவிட்டால் ரேசன் கார்டு, ஆதார்கார்டு ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்று ஆவேசமடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பு.

டைம்ஸ் குழு

KIWS சார்பாக ஆம்புலன்ஸ் சேவை, மரக்கன்று நடும் விழா மற்றும் இரத்ததான முகாம்..

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment