கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக நேற்று (26-09-2021) ஞாயிற்றுக்கிழமை, மாலை 7 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில், கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையைச் சார்ந்த மர்ஹூம் பஷீர் அஹமத் அவர்களின் மகன் பாசித் அஹமது என்பவர் கால்பந்து விளையாட்டில் இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சியில் விருது வழங்கி கண்ணியப்படத்தப்பட்டது.
இந்த விருதை புதுச்சேரி காவல் துறையில் பணிபுரியும் S. மவுலா சாஹிப் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார்கள்.
இதில் பொதுமக்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.