மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக பெரிய பள்ளிவாசல் அருகில் சமூக இடைவெளியுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கோஷமிட்டனர்.
விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஆர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் அமீர் பாஷா, விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிலால் முஹம்மது, விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சுலைமான், நகர செயலாளர் முஹம்மது பாரூக், நகர துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், பத்திரிக்கையாளர் அலி அகமது, நகர இளைஞரணி தலைவர் SMJ அமீன், இளைஞர் அணி செயலாளர் சம்சுதீன், MSF மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது அலி, நகர MSF பொறுப்பாளர் ஹாஜாத் அலி, சேட்டு, காலித் மற்றும் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் அப்துல் கரீம், நகர மார்க்க அணி பொறுப்பாளர் மவ்லவி ஃபக்ருதீன் பாரூக் ஜமாலி, முன்னாள் நகர இளைஞரணி தலைவர் அப்துர் ரஹ்மான், அல் ரஃபி மற்றும் பலர் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.