30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு கோட்டக்குப்பதில் கண்டன ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் பெண் காவலர் 21 வயதான சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் கோட்டக்குப்பம் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காயிதே மில்லத் அர்ச் அருகில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை ஆலோசகர் M. அப்துல் ரஹ்மான் அவர்கள் துவக்க உரையாற்றினார், முஸ்தாகிதீன் மற்றும் பிலால் முஹம்மது கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு A.K. பஷீர் அஹமத் அவர்கள் முன்னிலை வகித்தார் மற்றும் ஆஸ் என்கிற ஆபிதீன் நன்றி உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இயக்கங்கள் மற்றும் தாய்மார்கள் பெருந்திரளாக 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை காவல் ஆய்வாளர் ஆய்வு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகரில் குடிநீர் தண்ணீர் சீராக்கக்கோரி பேரூராட்சி அலுவலரிடம் மனு

கோட்டக்குப்பம் 1-ம் எண் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து பெரிய தெருவில் உள்ள நகராட்சி கடைகளை ஒதுக்க கோரி கவுன்சிலர்கள் மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment