June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்.

கொரோனா தொற்று 2-வது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் இன்று பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் அவர்களின் தலைமையையில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் Dr. ஜெயபிரகாஷ், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு வியபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோணா நோய் தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

தடுப்பூசி குறித்து பரவும் வதந்திகளால், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ‘கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ என்ற கோட்டக்குப்பம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வருகிற சனிக்கிழமை(27-03-2021) காலை 10:30 மணி அளவில், அனைத்து வியாபாரிகளுக்கும் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், “தடுப்பூசியைப் பற்றி விழிப்புணர்வு” நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் YMJ/KIET சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பசுமைப் புரட்சி: பி.எம். பவுண்டேஷன் சார்பில் 1000 விதைப்பந்துகள் வழங்கல்.

டைம்ஸ் குழு

Leave a Comment