June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் புதுச்சேரி செய்திகள்

145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அபாயத்தை குறிக்க கூடிய ஒரு எச்சரிக்கையாகும்.

145 கிமீ வேகம்

புயல் கரையை கடக்கும் போது மணிக்க 120 முதல் 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். கடலில் சீற்றம் அதிகமாக காணப்படும். கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஈகைத் திருநாள்.  [புகைப்படங்கள்]

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்: நாம் தமிழர் கட்சி மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்-மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment