June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர்.

கோட்டக்குப்பம் பர்கத் நகர் மெயின் ரோட்டில், நெடுங்காலமாக சாலை குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மூன்று சிறிய கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளையும் சிரமத்திற்கு உள்ளாக்கி வந்தது. மேலும், சில சமயங்களில் சேதமடைந்த வாய்களிலிருந்து கழிவுநீர் ரோடுகள் வழித்தோடியும் இருந்து வந்தது.

இதனை அப்பகுதி மக்கள் நகர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இன்று 22-வது வார்டின் கவுன்சிலர் Y. நாசர் அலி அவர்கள், நகர் மன்ற தலைவர் S.S ஜெயமூர்த்தி அவர்களின் உத்தரவின் பெயரில் நிரந்தரமாக தீர்வு காணும் வகையில் சேதமடைந்த 3 கழிவுநீர் பாதைகளை கம்பிகள் அமைத்து சரி செய்யப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்…

கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையருக்கு டைம்ஸ் குழுவினர் வாழ்த்து.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் ராகுல் காந்தி சிறை தண்டனைக்கு கண்டனம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது..

டைம்ஸ் குழு

Leave a Comment