வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய அபாயத்தை குறிக்க கூடிய ஒரு எச்சரிக்கையாகும்.
145 கிமீ வேகம்
புயல் கரையை கடக்கும் போது மணிக்க 120 முதல் 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். கடலில் சீற்றம் அதிகமாக காணப்படும். கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.