August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதிகளில் கொரோணா நோய் தடுப்பு சம்மந்தமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ரவுண்டானா வரை நடந்தே சென்று கோட்டக்குப்பம் பகுதியில் அரசின் சமூக விலகல் முறையாக கடைப்பிடிக்கபடுகிறதா என்றும் அரசு குறிப்பிட்ட நேரத்தில் கடைகள் அடைக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.

இரவு 8 மணிக்கு மேல் திறந்திருக்கும் கடைகளுக்கு சீல் வைக்கவும் முக கவசம் அனியாதவர்களிடம் அபராதம் விதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் DSP அஜய் தங்கம் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரி மற்றும் பெண்கள் அரபிக் கல்லூரி நிதியுதவி வேண்டுகோள்

கோட்டக்குப்பம் பகுதி மக்களின் அன்பைப் பெற்ற டிஎஸ்பி அஜய் தங்கம் இடமாற்றம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று(03/02/2022) மட்டும் 75 பேர் மனுத்தாக்கல்.

டைம்ஸ் குழு

Leave a Comment