August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி.

இந்திய திருநாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி தலைவர் ஓ. அஷ்ரப் அலி மற்றும் செயலாளர் A. முஹம்மது இலியாஸ் அவர்கள் முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றினார்.

ரப்பானிய்யா அரபிக் கல்லூரி துணைத்தலைவர் S. பிலால் முஹம்மத், மௌலவி முஹம்மது யஹ்யா ரப்பானி, செயலாளர்கள் – A. அமீர் பாஷா, SMJ அமீன், பொருளாளர் – ரஹ்மத்துல்லாஹ் எம் சி, செயற்குழு உறுப்பினர்கள் V. R. முஹமது இப்ராஹிம், ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், அப்துல் குத்தூஸ், B. முஹமது பாரூக், முன்சி உபைதூர் ரஹ்மான், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா கோட்டக்குப்பத்தில் கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் & நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கொரோனா காலத்தில் இரத்த தான முகாம் நடத்திய கோட்டக்குப்பம் TNTJ-விர்க்கு விருது

டைம்ஸ் குழு

Leave a Comment