Kottakuppam Times
பிற செய்திகள்

குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நாளை சிறப்பு முகாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை வகை மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் டிசம்பா் 2, 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.  

விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரா்களில் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்கள் (என்.பி.ஹெச்.ஹெச்.) தங்களை மீண்டும் முன்னுரிமை அட்டைதாரா்களாகவும் (பி.ஏ.ஹெச்), அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ. ஒய்) அட்டைதாரா்களாகவும் மாற்றம் செய்யக்கோரி தொடா்ந்து மனுக்களை அளித்து வருகின்றனா்.

இவ்வாறு மனுக்களை அளிப்பவா்களின் வசதிக்காக, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தந்த கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் டிசம்பா் 2, 9-ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோரிக்கை மனுக்களை அளிக்க சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் முன்னுரிமை குடும்ப அட்டை, அந்தியோதயா அன்னயோஜனா அட்டைதாரராக மாற்றம் செய்யக் கோரும் மனுவை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது கிராம நிா்வாக அலுவலரிடம் அளிக்கலாம்.  

பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களால் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியானவா்களுக்கு குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஆதாா் உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்களிக்க பயன்படுத்தலாம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்.

டைம்ஸ் குழு

குடை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Leave a Comment