29.9 C
கோட்டக்குப்பம்
May 12, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் 4 இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைப்பு.

கோட்டக்குப்பம் நகராட்சியில் உயர் கோபுர மின் விளக்குகள் 4 இடங்களில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று(28/09/2022) மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான 2-வது வார்டு, 13-வது வார்டு, 17-வது வார்டு மற்றும் 26-வது வார்டு ஆகிய நான்கு வார்டுகளில் உயர்மின் கோபுர விளக்கு (ஹைமாஸ் விளக்கு) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் பானுமதி, துணை தலைவர் திருமதி ஜீனத் பி முபாரக், 13-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் எஸ் ஜெயஸ்ரீ சுகுமார், 2-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கலா மணிகண்டன், 17 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரஹமதுல்லா மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் உயர்கோபுர மின்விளக்கு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது: கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லைகள் அடைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் கூட்டு குர்பானி…

Leave a Comment