29.6 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

கோட்டக்குப்பம் தைக்கால் திடல் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் அருகில் மர்ம நபர்கள் இரவில் அடிக்கடி குடிப்பதும், மின்சார வயர்களை திருடுவதும், அங்கன்வாடி சுற்றுச் சுவர்களை நாசம் செய்வதும் என தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக நேற்றிரவு, சமூக விரோதிகள் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தின் பெயர் பலகையை எரித்துள்ளனர்.

இதனைக் கண்டித்து 18-வது வார்டு கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா அவர்கள் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், பொது சொத்தான அங்கன்வாடி மையத்தை தொடர்ந்து சேதப்படுத்தி பெயர்பலகை கொளுத்தி நாசம் செய்து வரும் மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்.

டைம்ஸ் குழு

கொரோனா காலத்தில் இரத்த தான முகாம் நடத்திய கோட்டக்குப்பம் TNTJ-விர்க்கு விருது

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி: 27 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment