27.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள்.

தமிழகத்தில் வரும், 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து போடப்பட உள்ளது.

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிப்பதற்காக, ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு தவணை மட்டுமே போடப்படுகிறது

கடந்த ஜனவரி 23ம் தேதி போடவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் 27ம் தேதி, 43 ஆயிரத்து, 51 மையங்களில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, கோட்டக்குப்பத்தில் கீழ் கண்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மதரசாவில் ஆலோசனை கூட்டம்.

மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பேரூராட்சியில் தேசியக் கொடி ஏற்றினார் செயல் அலுவலர் இராமலிங்கம்.

டைம்ஸ் குழு

Leave a Comment