May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்.

கோட்டக்குப்பம் கோரித்தோப்பில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

நேற்று, இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி மற்றும் நகராட்சி உதவியாளர் திரு.துரை அவர்களிடம் அந்த தெரு மக்கள் சார்பாக கோட்டக்குப்பம் டைம்ஸ் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

உடனே இது சம்பந்தப்பட்ட ஊழியர்களை போனில் தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டி ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, கோட்டக்குப்பம் நகராட்சி ஊழியர்கள் உடனடியாக அங்கு வந்து குப்பைகளை முழுவதும் அகற்றி பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர்.

இந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த கோட்டக்குப்பம் நகராட்சிக்கு பொதுமக்கள் சார்பாகவும் மற்றும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பத்தில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் தரை வழி மின் கேபிள் & விளக்குகள் அமைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் அமைச்சா் க.பொன்முடி பிரசாரம்.

டைம்ஸ் குழு

Leave a Comment