29.4 C
கோட்டக்குப்பம்
May 19, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்.

சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் பானுமதி கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமனம்.

புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்கள் நியமித்து தமிழக அரசு வெளியிடப்பட்ட அறிக்கை: பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கனசாலை. தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர். காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்குடி ஆகிய பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதியதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமித்து நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் பானுமதி கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஜும்மா தொழுகை விளக்க பயிற்சி

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பர்கத் நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்தது.

டைம்ஸ் குழு

Leave a Comment