30.7 C
கோட்டக்குப்பம்
May 12, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கோட்டக்குப்பத்தில் இருக்கும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் பகுதியில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி அருண் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் சரவணன் மற்றும் புதிய துணை ஆய்வாளர் மற்றும் பயிற்சி மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டு வியாபாரிகள் காவல் துறையோடு ஒத்துழைக்க வேண்டிய முக்கியத்தையும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு கேமராவை கோட்டக்குப்பம் முழுவதும் முக்கிய பகுதிகளில் நிர்மாணிப்பது என்றும் அதற்கு வியாபாரி சங்கங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது மற்றும் குற்றச் செயல்கள் குறைப்பதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் 150-வது ஆண்டு முப்பெரும் விழா அழைப்பு 

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக டென்ட் வழங்கப்பட்டது.

இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை.

டைம்ஸ் குழு

Leave a Comment