28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு கூட்டம்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து சுகாதாரத் துறை, காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட வணிகர்கள் பொதுமக்களுக்கு இன்று (27-03-2021) காலை 11:00 மணி அளவில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் Dr. ஜெயபிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன், மற்றும் சுகாதார ஆய்வாளர் ரவி ஆகியோர் கலந்துக்கொண்டு வியபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ‘கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ என்ற எடுத்து கூறினார்.

நிகழ்வின் முடிவில் வியாபாரிகளும் மற்றும் பொதுமக்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக மழை நிவாரண உதவி.

டைம்ஸ் குழு

ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா

Leave a Comment