May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் ஆதார் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.

இந்திய அஞ்சல் துறை மற்றும் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம் பெரிய பள்ளிவசால் அருகில் உள்ள சௌக்கத்துள் இஸ்லாம் மதரஸாவில் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த முகாம் இன்று(பிப்ரவரி 15), நாளை(பிப்ரவரி 16) மற்றும் நாளை மறுநாள்(பிப்ரவரி 17), காலை 10-மணி முதல் மாலை 5-மணி வரை நடைபெறும்.

எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதியதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்கின்றனர். இதை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா குடியரசு தின விழா.

டைம்ஸ் குழு

பரகத் நகர் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி…

கோட்டக்குப்பம் மின்வாரியத்தில் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment