August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இன்று முதல் மாலை 5 மணி வரை கடை திறந்திருக்க அனுமதி.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் கோட்டக்குப்பம் பகுதியில் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட இதுநாள்வரை கோட்டக்குப்பம் பேரூராட்சி அனுமதித்து வந்தது.

கோட்டக்குப்பம் வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று இன்று முதல் கடைகளை மாலை 5 மணி வரை திறந்து வைத்திருந்து வியாபாரம் செய்ய அனுமதிப்பதாக கோட்டகுப்பம் செயல் அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஆகையால் வியாபாரிகள் தங்கள் கடைகளை 5 மணி வரை திறந்து வியாபாரம் செய்யலாம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் இஷா அத்துல் இஸ்லாம் மாணவர் சங்கத்தில் சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது.

டைம்ஸ் குழு

37-ம் ஆண்டில் கோட்டக்குப்பம் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை

கோட்டக்குப்பத்தில் மதநல்லிணக்கம் – மனிதநேயம் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி.

டைம்ஸ் குழு

Leave a Comment