கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் கோட்டக்குப்பம் பகுதியில் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட இதுநாள்வரை கோட்டக்குப்பம் பேரூராட்சி அனுமதித்து வந்தது.
கோட்டக்குப்பம் வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று இன்று முதல் கடைகளை மாலை 5 மணி வரை திறந்து வைத்திருந்து வியாபாரம் செய்ய அனுமதிப்பதாக கோட்டகுப்பம் செயல் அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஆகையால் வியாபாரிகள் தங்கள் கடைகளை 5 மணி வரை திறந்து வியாபாரம் செய்யலாம்.