இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் செவதறியாது நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து இன்றளவும் கண்டறியப்படவில்லை.
உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு பல்வேறு சோதனைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், covaxin TM என்ற மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது.