May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இரவு 8 மணிவரை கடைகள் நடத்த ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை.

விழுப்புரம் மாவட்டம் வியாபாரிகள் சங்கம் தீர்மானத்தின்படி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடைகளை 4 மணிக்கெல்லாம் அடைக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கம் தீர்மானித்து இருந்தனர். அதன்படி நேற்று முதல் கோட்டக்குப்பத்தில் கடைகளை 4 மணிக்கெல்லாம் அடக்க வேண்டும் என்று காவல் துறையினரும் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளும், கோட்டகுப்பம் பகுதியில் நேற்று மாலை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

இந்நிலையில் இன்று கோட்டக்குப்பத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, எங்களுக்கு 4 மணிக்கு மேல் தான் அதிகப்படியாக வியாபாரம் நடக்கும், ஆகையால் எங்களுக்கு 8 மணி வரை பார்சல் மூலமாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று செயல் அலுவலரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இது சம்பந்தமாக மேலதிகாரிகளிடம் பேசி நாளைய தினம் உங்களுக்கு பதிலளிப்பதாக கூறியதை ஓட்டல் உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம்‌ நகராட்சிக்கான புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்ப்பட்டுள்ள குளறுப்படிகள்‌ குறித்து மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நாளை தளர்வில்லா முழு அடைப்பு: செயல் அலுவலர் அறிவிப்பு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா கூட்டு குர்பானி 2021 அறிவிப்பு…

டைம்ஸ் குழு

Leave a Comment