January 15, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டில் உள்ள மாமூலப்பை தெரு சந்திப்பில் இன்று தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா அவர்கள் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிறகு சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் தனது வார்டில் வாக்களித்தபடி நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் பற்றியும், எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம். பகுதி – 2

டைம்ஸ் குழு

இஸ்ரேலின் இன அழிப்பை கண்டித்து: கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஸ்தம்பித்த நகராட்சி திடல்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் ஜூலை 17-ல் இஸ்திமா.

டைம்ஸ் குழு

Leave a Comment