இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோட்டக்குப்பத்தில் உள்ள அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
இந்த மரியாதைக்குரிய நிகழ்வில், கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், அஞ்சுமன் நூலகத்தின் செயற்குழு உறுப்பினர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசபக்தியை வெளிப்படுத்தினர்.











