February 3, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரிப்பு! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளும் கொசுத்தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அன்றாட வாழ்வில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

முக்கியமாக, ஒரு பகுதியில் மட்டும் கொசு மருந்து தெளித்துவிட்டு, மற்ற பகுதிகளில் தெளிக்காமல் விடுவதால், கொசு உற்பத்தி குறையாமல் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக கொசு மருந்து தெளித்து, கொசு உற்பத்தியை தடுத்து நிறுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொசு அதிகரிப்பால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளித்தல், நீர்நிலைகளை சரிபார்த்தல், குப்பை கிடங்குகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து, பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதியில் குப்பைகளை எரிக்கும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம்

டைம்ஸ் குழு

Leave a Comment