May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து வரும் 25-ஆம் தேதி முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக இன்று 11/10/2023 புதன் மாலை 4 மணிக்கு, கோட்டக்குப்பத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக மின்வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஜனநாயக போராட்டத்தை நடத்துவதற்காக தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி, இயக்கம், பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகம், கோவில் நிர்வாகம், மீனவ பஞ்சாயத்து, வியாபாரிகள் சங்கம், தொழிற்சங்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

அதன் அடிப்படையில் 25/10/2023 புதன்கிழமை ஒரு நாள் கடை அடைப்பு மற்றும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் தீனியாத் மக்தப் மதரஸா திறனாய்வு போட்டி…

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் எம்.ஜி ரோட்டில் வேகத்தடை அமைக்கக்கோரியும் மற்றும் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் நகராட்சிக்கு பொதுநலன் மனு!

டைம்ஸ் குழு

Leave a Comment