26.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் 13-வது மற்றும் 14-வது வார்டு சத்யாநகர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் 6-வது முறையாக இன்று(11/04/2023) செவ்வாய்க்கிழமை காலை ஏழு கிலோ நவதானியங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

குழந்தைகளுக்கு மில்க் பிஸ்கெட் தி.மு.க. நகர மாணவரணி அமைப்பாளர் எஸ்.சுகுமார் மற்றும் 15-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் I. ஜாகிர் உசேன் ஆகியோரின் முன்னிலையில் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M. ஸ்டாலின் சுகுமார் அவர்கள் வழங்கினார்.

மேலும், இதுவரை 60 கிலோ நவதானியங்கள் குழந்தைகளுக்கு இந்த அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

டைம்ஸ் குழு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு.

டைம்ஸ் குழு

வெளிநாடுகளில் வசிக்கும் நமது கோட்டகுப்பம் நண்பா்கள் ஈத் பெருநாள் தொழுகை காட்சிகள்

Leave a Comment