20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா.

1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்றைக்கு 75-வது ஆண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. நாட்டின் சுதந்திர தின விழா முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஷாஹுல் ஹமீது அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார்.

நிகழ்ச்சியில் அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத் அலி அவர்கள், “நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாகவே மூவர்ணக் கொடியை ஏற்றிய அறிவு மையம் அஞ்சுமன். தொடர்ந்து பல வருடங்களாக தேசியக் கொடியை ஏற்றுவதும் சுதந்திரத்தை நெஞ்சுக்கு நெருக்கமானதாகவும் கொண்டாடுவதும் பல்வேறு இஸ்லாமிய மத நிறுவனங்களின் பணி. அஞ்சுமனின் அந்த பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைகளுக்கும் கடத்த வேண்டும்” என கூறினார்.

நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம். பகுதி – 2

டைம்ஸ் குழு

கோட்டகுப்பத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்…

Leave a Comment