26.1 C
கோட்டக்குப்பம்
March 22, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் விரைவில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்.

தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் “WAKF – மஸ்ஜித் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை” மாவட்ட தலைநகர மஸ்ஜிதுகளில் தொடங்க இருக்கிறது.

இது சம்பந்தமாக, இன்று(19/07/2022) காலை 10:30 மணி அளவில் மாவட்ட மஸ்ஜிது நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்றது. இதில், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு, இந்த பயிற்சி முகாமிற்கு ஒப்புதல் பெற்றனர்.

பயிற்சிகள் (ஆன்லைனில்)

  1. UPSC சிவில் சர்விஸ் IAS ( முமுநேரம் மற்றும் பகுதி நேரம்)
  2. மத்திய அரசின் SSC – CGL / CHSL / CPO / MTS ( பகுதி நேரம் மட்டுமே )
  3. TNPSC ( Group 1,2,3,4 & VAO ) –
    (முமுநேரம் மற்றும் பகுதி நேரம்)

முமு நேர பயிற்சி, பட்டபடிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி நாள் : திங்கள் முதல் சனி வரை

பகுதி நேரம் ( Week End ) பயிற்சி

கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் வேலை பார்த்து பார்த்துக் கொண்டே படிக்க விரும்பும் பட்டதாரிகள் சனி மற்றும் ஞாயிறு பயிற்சி பெறலாம்.

பயிற்சி கட்டணம் மிகவும் குறைந்த கட்டணமாக ஒரு ஆண்டுக்கு ரூ.5000/ கட்டணமாக பெறப்பட்டு, இந்த பயிற்சியில் முழுமையாக வருகை புரிந்து, சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும். முதல் தவணையாக ரூ.2500/ செலுத்தி தங்களின் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளவேண்டும். மேலும் இந்த பயிற்சி திட்டத்தில் சேருவதற்கு நுழைவு தேர்வும் நடத்தப்படும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க:

விண்ணப்பிக்க கடைசி தேதி :

31, ஜூலை 2022 ( மாலை 6.00 மணி)

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அபுதாபி வாழ் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

கோட்டகுப்பத்தில் கட்டாய ஹெல்மெட்

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment